கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.