சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை முடித்து தாயகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஹஜ் செல்வதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து போதுமான அளவுக்கு விமானசேவை ஏற்படுத்திக் கொடுத்து சவுதியில் அவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள், அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் செய்து தரப்பட்டது. இத்தகைய சிறப்பான ஒரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தை பொறுத்த வரையில், மேலும் ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்று அமைச்சரிடம் அபுபக்கர் வலியுறுத்தினார். இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஜெயின், சிங், பார்சிய சமூகம் சார்ந்த சிறுபான்மை மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒரு உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்று குறிப்பிட்டார். தமிழகத்தை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களுடைய பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதை சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அமைச்சரும் அதற்கு சம்மதம் தெரிவித்து கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சரை தமிழகத்திற்கு வருமாறு அபூபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.