தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்   டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒட்டல் பிரிவு மற்றும் இதர பிரிவுகள், அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவ் ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப சுற்றுலா ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. த.பொ.ராஜேஷ், இ.ஆ.ப மற்றும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 18 மாதங்களாக கோவிட்  19 நோய் தொற்றின் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் பெறுமளவு குறைந்துள்ளது. இதன் சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்டு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தங்களது வருவாய் பெருமளவு இழந்துள்ளனர். வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும்  தரும் சுற்றுலா பயணிகளின் eyid கருத்தில் கொண்டு நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களின் வருவாய்யை அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதி பெற்று, வல்லுநர் குழு அமைப்பதற்கு இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்நாட்டில்  வருவாய் அந்நியச் செலவாணி ஈட்டுதல், மண்டல வாரியான வளர்ச்சி ஆகிய மேம்பாட்டிற்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தியாவில் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம், அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் அருள்மிகு பிரகதீசுவரர் கோயில், இந்தியாவின் கன்னியாகுமரி மற்றும் அழகிய மலைவாழிடமான உதகமண்டலம் மற்றும் இதர சுற்றுலா தலங்களை கண்டுரசிக்க உலகம் முழுவதிலிமிருந்து  சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு தருகின்றனர். மேலும் தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், தனிநபர் பாதுகாப்பு, மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றின் தமிழ்நாடு தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகளின் வருகையில் முன்னனி மாநிலமாக உள்ளது.

​கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை தமிழர்களின் பாரம்பரிய முக்கிய இடமாக
திகழ்ந்து வருகின்றது. அங்கு வருகை புரியும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் முயற்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அனுமதி
பெற்று அய்யன் திருவள்ளுவர் சிலையின் அழகினை இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சீரொலி சீர்மிகு காட்சி  அமைக்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தினார். ​சோழர்களின்  முக்கிய நகரமான பூம்புகாரில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தினை உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் வருகையினை அதிகரிக்கும் வகையில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்ட அறிக்கை  தயார் செய்ய அறிவுறுத்தினார்கள். இவ் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள  சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அணுகு சாலைகள், உடை மாற்றும் அறைகள், கார் நிறுத்துமிடங்கள், குடிநீர், வழிகாட்டும் பலகைகள், மின் விளக்கு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் ஒன்றிய அரசு சுற்றுலா அமைச்சகம் மாமல்லபுரத்தை சுற்றுலாத்தளமாக தேர்வு செய்துள்ளது. இத்தலத்தில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சுமார் ரூ.441 nfho மதிப்பீட்டில் முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இராமேஸ்வரம் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை சுற்றுலா கண்ணோட்டத்தில் மேம்படுத்த சுமார் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 295 சுற்றுலா தலங்களில் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவை உலக வரைப்படத்தில் நிலைப்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்கள்