நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு!

அரியலூர்.ஜூலை. 20: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், எதிர்வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கவும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது.