இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 20: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்பாக, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானிய தொகையை, ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. அன்பரசுடன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்
பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந் நிகழ்வில், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் எஸ்சுரேஷ்குமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர. ராகுல் நாத் இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி,
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.