பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்கிறார் சரத்குமார்

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பாலபவன்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன்கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதுபெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும்வேதனையை உண்டாக்கியுள்ளதுகல்வி ஸ்தாபனங்கள் மாணவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தைகற்பிக்கவும்சமூகத்தில் நன்மனிதர்களாக உருவாக்கிடவும்உலகஅறிவை பெருவதற்கும் அமைக்கப்பட்ட தடம்கட்டுப்பாடானஒழுக்கத்துடன்மனிதபண்பையும்மாண்பையும் வளர்க்கும்கல்வியை பெறுவதற்காக கல்வி நிறுவனங்களை நம்பிபெற்றோர்கள் முழுநேரம் பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்புகிறார்கள்.  அப்பேற்பட்ட கல்வி நிறுவனத்தில் இத்தகைய அவல நிலைஏற்படுகின்றது என்று சொன்னால்மாணவர்களின் எதிர்கால கனவுசிதைந்துவிடாதா?  ஒருசில கயவர்களின் அட்டூழியத்தால்ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் இச்சம்பவம் தலைகுனிவுஏற்படுத்தியுள்ளது என்பதால் உன்னத பணி செய்யும்ஆசிரியர்களின்  வேதனையையும் நான் அறிகிறேன்வாழ்க்கைப்பயணத்தின் குழந்தை பருவம் முதல் இளைஞர் பருவம்வரை பெரும்பாலான நாட்களை எடுத்துக்கொள்ளும் கல்வியைபெற செல்லும் மாணவிகள் இத்தகைய பாலியல் கொடுமைகளை  அனுபவித்து கொண்டும்சகித்து கொண்டும் இருக்க வேண்டியஅவசியம் கிடையாது

முதலில் பெற்றோர்களும்மாணவர்களும் கல்வி நிலையங்களில்நடந்தேறும் குற்றங்களை தைரியமாகவெளிப்படையாகதெரிவிக்கும் நிலைக்கு வர வேண்டும்தனியார் பள்ளிகளில் மாற்றுசான்றிதழ் (TC) வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தைகேள்விக்குறியாக்கிவிடுவார்கள் என தனியார் பள்ளிகள் மிரட்டல்பிம்பத்தை வைத்துள்ளனர்அந்த மிரட்டல் பிம்பத்தை கிழித்திடகுற்றங்களை எடுத்துச் சொல்ல துணிச்சல் வர வேண்டும்பெற்றோர்களும்மாணவர்களும் புகார்களை வெளிப்படையாகதெரிவிக்கக்கூடிய சூழலை தமிழக அரசு உறுதி செய்வதுடன்மாணவர்களின் கல்வி பாதிக்காதவண்ணம் பாதுகாப்பானமுறையில் கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும்.பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகிறது எனகுற்றவாளிகள் வெளிப்படையாக  ஒப்புக்கொள்ளும் போதுகல்விநிறுவனத்தில் நடந்தேறிய தவறுகளை கவனத்தில் கொள்ளாமல்அலட்சியமாக செயல்பட்ட நிர்வாக தலைமை மீதும் நடவடிக்கைஎடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதிசெய்யப்படும்.  கொரோனா சமயத்தில் எவ்வளவோ நெருக்கடிகள்எத்தனையோகஷ்டங்கள்அத்தனையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளின்ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு அலைபேசிலேப்டாப்இணையதள வசதிகல்விக்கட்டணம் என தங்கள் சக்திக்கு மீறிஅனைத்து படிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள்மன உளைச்சலில் உழலச் செய்யக்கூடாதுநெஞ்சு பொறுக்காத இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மீது தமிழகஅரசு தனிக்கவனம் செலுத்தி கயவர்கள் யாராக இருந்தாலும்எந்தசமுதாயத்தை சார்ந்திருந்தாலும்எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அகில இந்தியசமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.