புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி!

புதுச்சேரி 22, மே:- புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர்
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌதாரராஜனிடம் வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, தெலங்கானாவிலிருந்து கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 10 ஆம்பொனைக்ஸ் மருந்துகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் அளித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரிகள் அவர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.