பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள பாபு செட்டித் தெருவில் பொதுவிநியோக கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். அதைத் தொடரந்து தில்லைநகர் ரஹ்மானியாபுரத்திலும் புதிதாக கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டடத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.