100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்!

செங்கல்பட்டு. ஜூலை. 19: ஆலந்தூர் தொகுதியை சேர்ந்த ஆலந்தூர் பகுதி அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அ.ம.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், அ.ம.மு.க. நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, ஊரக தொழித்துறை  அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.