மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கவேண்டுமென்கிறார் கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதைத் தமிழக அரசு ரத்துசெய்திருக்கிறதுஆனால்நீட் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசுமுயற்சி மேற்கொண்டு வருகிறதுதமிழகத்தைப் பொறுத்தவரைநீட்தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படிக்கிற பின்தங்கியஒடுக்கப்பட்டசமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்ஆனால்சி.பி.எஸ்.மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிற அநீதிநடைபெற்று வருகிறது.  சமீபத்தில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி கடந்த 15 ஆண்டுகளில்அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாமல் கடும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர்கடந்த 2006 முதல் 2016 வரை அரசுப் பள்ளிகளில் படித்த 340 மாணவர்கள் மட்டுமேமருத்துவக் கல்லூரியில் சேருகிற வாய்ப்பை பெற்றுள்ளனர்இதில்விதிவிலக்காக 2007 ஆம் ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் படித்த 62 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பைப்பெற்றனர்ஆனால், 2013 ஆம் ஆண்டில் மிக மோசமாக வெறும் 18 மாணவர்கள்மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்நீண்டகாலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில்சேருகிற வாய்ப்புஇத்தகைய அவலநிலையில் தான் உள்ளது2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த700 மாணவர்களுக்கு நீட் மூலமாக தேர்வு பெற்றிருந்தாலும்இதில் 9 மாணவர்களுக்குத் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்ததுநீட் தேர்வின் காரணமாக அநீதி அதிகரித்ததே தவிரகுறையவில்லை.  இந்த அநீதியைப் போக்குவதற்குத் தான் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டதுஅதன் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர313 மாணவர்களுக்கும்பல் மருத்துவ படிப்பிற்கு 92 மாணவர்களுக்கும்கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்ததுஅதாவதுஅரசுப் பள்ளியில் படித்த405 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகிடைத்ததுகடந்த ஆண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வை 8.41 லட்சம் பேர்எழுதினர்இதில் 3.44 லட்சம் பேர் (41 சதவிகிதத்தினர்அரசுப் பள்ளிமாணவர்கள்தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில்மொத்தம் 3,400 இடங்கள் உள்ளனதமிழக அரசின் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு காரணமாக மொத்தமுள்ள 3,400 இடங்களில் அரசுப் பள்ளியில்படித்த 405 மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு கிடைத்துள்ளதுமீதமுள்ளமூவாயிரம் இடங்களில் சி.பி.எஸ்.மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளதுஇத்தகைய அநீதியைப் போக்க வேண்டிய நேரம் வந்து விட்டதுஅதேநேரத்தில் தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தநடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.  எனவேநீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப்போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக முதலமைச்சர்தளபதி மு.ஸ்டாலின் அவர்கள் தீவிரமாக எடுக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன்நீட் தேர்விற்கு மாற்றாக எந்த அடிப்படையில்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது என்பதுகுறித்து வல்லுநர் குழுவை அமைத்துஅவர்களது பரிந்துரையை ஏற்றுதமிழகத்தில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிஇடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைஅமைந்திடகுறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குமுன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன்.