முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பாக அதன்  அதிபர் எம்.கே.எம். முகமது ஷாபி ரூபாய் ஐந்து லச்சத்திற்கான காசோலையை, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஸ்ணுவிடம்  வழங்கினார். உடன் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், ஷிபா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் முகமத் அரபாத் ஆகியோர் உள்ளனர்.