வி.ஜி.பி. குழுமம், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லட்சம் வழங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வி.ஜி.பி. குழும நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லச்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வி.ஜி.பி. ரவிதாஸ், ராஜதாஸ், மற்றும் வி.ஜி.பி. பாபுதாஸ் ஆகியோர் உள்ளனர்.