18ம் திகதி புதன்கிழமையன்று மதியம் கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பரிசோதனைச் சாவடியை நோக்கி, கனடா உதயன் நண்பர்கள் மற்றும் இலங்கை ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களோடு அவசரமாகச் சென்ற வேளையில் எடுக்கப்பெற்ற படம் இது. தமிழ் பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அழைப்பின் பிரகாரம் எமது பாராளுமன்ற விஜயம் இடம்பெற்றது. கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒட்டாவா பாராளுமன்றம் மற்றும் அவரது தொகுதியான ஸ்காபுறோ ரூஜ்பார்க்-கில்வுட் தொகுதி அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது நன்றி! இந்த பயணத்தின் போது அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக கவனித்ததற்காக!
Related Posts

ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் Aris Babikian அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற 3வது ஆண்டு ‘ஆர்மேனியன் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்.
