வலைதளத்தில் வழங்கிய விருதுகள் மேடை காண்கிறது

வெறும் பொழுதுபோக்கு கருவி என்ற நிலை மாறி, திரைப்படங்கள் இன்று வரலாற்றையும், அரசியலையும், பண்பாடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்யும் அறிவார்ந்த தளமாக மாறி உள்ளன. இந்நிலையில்தான், தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்களை மட்டுமல்லாது தங்களது அறிவு, அனுபவம் மற்றும் கடும் உழைப்பால் திரைப்படங்களை உருவாக்கித்தரும் தொழில்நுட்பக் கலஞர்களுக்கும் விருது கொடுத்துப் பாராட்டி மக்களிடம் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் “கெய்ப்”  விருதுகள் வழங்கும் விழா தொடங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக விருதுகள் வலைதளத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டு, கலைஞர்களின் இடத்திற்கே சென்று வழங்கப்பட்டன. இந்த ஆறாம் ஆண்டு  முதல் முறையாக மேடையமைத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ******