பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்யும்போது உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்குவதை அனைத்து பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என அவலுவலர்களுக்கு மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் உத்தரவு.  தமிழகம் முழுவதும்  10,771 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவை பால்உற்பத்தியாளர்களுக்கு தரத்தின் அடிப்படையில்  நியாயமான விலையை வழங்குவதை உறுதி செய்வதோடு பால்உற்பத்தியாளர்கள் மேம்பாட்டிற்கும், கால்நடை பராமரிப்பிற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரம் ஒரு முறை விவசாயிகளுக்கு பால்தொகைபட்டுவாடா செய்வது நிறைவேற்றப்பட்டு விவசாயிகளிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  அதேபோன்றுSpot Acknowledgement  மூலம் விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தரத்திற்கேற்ற விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு  கடந்த மூன்று மாதங்களாக நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தோராயமான விலை என்ற நிலை மாறி தரத்திற்கேற்ற விலையைஆவின் வழங்கி வருகிறது. இந்நடைமுறையை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தி அனைத்து பால் உற்பத்தியாளர்கள் பயனடையச் செய்ய வேண்டும் என நடந்தது  துணை ப்பதிவாளர்களுக்கான (பால்வளம்) ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு..மனோ தங்கராஜ்அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.