இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்

ஃப்ரைடே பிலிம் பேக்டரி  சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  பாலா , ட்ரீம்ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில்,  பிரசாத் முருகன்இயக்கும் திரைப்படம்ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ்‘ இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவருகிறது.  இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.*******

இப்படத்தைப் பற்றி இயக்குநர்  பிரசாத் முருகன் கூறுகையில்.. மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்தசந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லதுதீமைக்கோ பயன்படுத்துவான். அப்படி  நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக  ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில்இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும்செய்து கொடுத்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது என்றார்.

இப்பபடத்தில் பரத், ஷான், ராஜாஜி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். கதையின் நாயகிகளாகவிருமாண்டி அபிராமி, டாணாக்காரன் அஞ்சலி நாயர், ‘குக் வித் கோமாளிபுகழ் பவித்ரா லட்சுமிஆகியோருடன் திருநங்கை தீக்‌ஷா முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார்.

இவர்களுடன் மாறுபட்ட  கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.