முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுடன்
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன்  சந்தித்தார். அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் இரண்டு மணி நேரம் உரையாடி வெகு விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கிறோம் என வாக்குறுதி தந்ததோடு மட்டுமல்லாமல்

அவரே தன் கையால் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு பேரன்போடு தனது இல்லத்தில் உணவளித்து பெரும் நம்பிக்கை தந்து வழியனுப்பினார். அமைச்சர் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக நெகிழ்ந்த நன்றிகள்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி