கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள்

ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களுக்கு  “சிவாகமக்கலாநிதி”  எனும் விருது
 
கனடாவில்  தமிழ், சமய, சமூக நற்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவரும் தொழிலதிபர், , திரு. கணேசன் சுகுமார் அவர்களுக்கு “சிவநெறிக்காவலர்” எனும்  விருது
 
(மயிலாடுதுறையிலிருந்து கனடா உதயன் சென்னைச் செய்தியாளர் பிரகாஷ்)
 
 
கடந்த 30-08-2023 புதன்கிழமையன்று  தமிழ்நாட்டில் கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு  உயர் விருதுகள் வழங்கப்பெற்றன.தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை  திருக்கோவில் உயர் கௌரவ விருதுகள்  வழங்கப்பெற்றன. மேற்படி விருதுகள் வழங்கும் வைபவத்தில் ஸ்காபுறோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களுக்கு  “சிவாகமக்கலாநிதி”  எனும் விருதும் கனடாவில்  தமிழ், சமய, சமூக நற்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவரும் தொழிலதிபர், , திரு. கணேசன் சுகுமார் அவர்களுக்கு “சிவநெறிக்காவலர்” எனும்  விருதும் வழங்கப்பெற்றன. மேற்படி விருதுகள் வழங்கப்பெற்றபோது ஆலய வளாகத்தில் சுமார் 5000 பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியப்பெருமக்கள் அங்கு கூடி நின்று விருது பெற்ற இருவரையும்  வாழ்த்தும் வகையில் வழிபாடுகளையும் வேதங்களை ஓதி நின்று விசேட பூசைகளையும் ஆற்றினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது இந்த விருதுகள் வழங்கப்பெற்றதன் சிறப்புக்களை பின்வருமாறு குறிப்பிடலாம்  தமிழகம்-திருவாவடுதுறை ஆதீனத்தின் உயர் கௌரவ விருது
தமிழகம் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத ஸ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவில் 30.08.2023 புதன்கிழமை மயிலாடுதுறை சிவபுரம் கல்வி அறக்கட்டளை அதிபர். சிவஸ்ரீ. ரவி சுவாமிநாத சிவாச்சார்யார் அவர்களின் நல் ஆசியுடன் இலங்கை, புங்குடுதீவு, கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தையும், கனடா ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தையும் வேத ஆகம முறைப்படி நேரகால நியமம் தவறாது நிர்வகித்துவரும் ஆலய ஸ்தாபகர், முதல்வர், பிரதமகுரு “சிவாச்சார்யகுலபூஷணம்” சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களின் தமிழ், சமய, சமூக, கலைப்பணிகளையும், வேத, சிவாகம, குருத்துவப்பணிகளையும் பாராட்டி “சிவாகமக்கலாநிதி” எனும் கௌரவ விருதினையும்
இலங்கையிலும், கனடாவிலும்  வர்த்தகத் துறையில் மேலோங்கியிருந்தாலும் தனது சமூகத்தையும் சமயத்தையும் கைவிடாமல்  தமிழ், சமய, சமூக நற்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவரும் தொழிலதிபர், வர்த்தகப் பிரமுகர்,  கணேசன் சுகுமார் அவர்களுக்கு “சிவநெறிக்காவலர்” எனும் கௌரவ விருதினையும் பல்லாயிரக்கணக்கான சைவத்தமிழ் மக்கள் மத்தியில் சிவாச்சார்யார்கள் சூழ்ந்திருக்க  இந்த விருதுகள் வழங்கப்பெற்றன இன்னும் மேன்மையுடன் சொல்லுவதானால்  இந்த ஆலயத்தில் தான் “பாரதப் பிரதமருக்கு செங்கோல் வழங்கிய” திருவாவடுதுறை ஆதீனம்  24-வது குருமஹாசன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ. அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தனது திருக்கரங்களால் வழங்கிக் கௌரவித்தமை பெருமையோடு போற்றுதற்குரியதாகும். “சிவாகமக்கலாநிதி” சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமாரக்குருக்கள், “சிவநெறிக்காவலர்” திரு. கணேசன் சுகுமார் அவர்களின் தமிழ், சமய, சமூக நற்பணிகள் மேலும் மேலோங்கவேண்டும் என்றும் அங்கு கூடியிருந்த சிவாச்சாரியப் பெருமக்கள் அனைவரும் பக்தியுடன் கூடிய வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விருதுகள் பெற்ற இருவரும் தற்போது கனடாவிற்கு பயணமாகியுள்ளார்கள் எனவும் அறியப்படுகின்றது
 
 
ஸ்காபுறோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களுக்கு  “சிவாகமக்கலாநிதி”  எனும் விருது வழங்கப்பெற்றது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பல சிவாச்சாரியப் பெருமக்கள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்
அவர்களில் ஒருவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
“ஈழத்து சிவாச்சார்யர்கள் உலகெங்கும் பரவி புகழோடும் சிறப்போடும் திகழ்வதற்கு முக்கியமான சில குருமார்களின் பங்களிப்பு முக்கியமானது.