மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை ஆதீனமாக  292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் சுவாமிகள் முக்தியடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மதிரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக முடிசூட்டினார். இதற்கு மற்ற மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நீக்கினார். தற்போது மதுரை ஆதீனம் மரணமடைந்ததை தொடர்ந்து, நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்துக்கு உரிமை கோரி டுவிட் செய்திருந்தார். அதனால் தருமைபுரி மடாதிபதி மதுரை ஆதீன கர்த்தர் தங்கி இருந்த அறையையும் அலுவலகத்தையும் சீல் வைத்துள்ளார்.