விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்

2024 ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் தலைவர் கமல் ஹாசன்

முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார உழைப்பாளி விவசாய சங்கத்தின் தலைவர்A.அருள் தலைமையில் 50 பேர் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விரைவில் விவசாயசங்கத்தினர் 3000 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளதாக விவசாய சங்கதலைவர் தெரிவித்தார்.

நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் .அருணாச்சலம், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, ராகேஷ் ராஜசேகரன் ஆகியோர்உடனிருந்தனர்.