தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் 25.1.2022 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்,தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.