தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல்

09.01.2023 அன்று காலை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை. முழு கரும்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கும் பொங்கல் பரிசு தொகை திட்டத்தை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசன் உத்தரவின் படியும் இ. கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் மற்றும் இரண்டாவது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை அறிவுறுத்தலின்படி பகுதி செயலாளர் இ எஸ் .பெர்னாட் பகுதி அவைத் தலைவர் வை. தா.ரா மூர்த்தி தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா ஆர் கே நாகராஜன் எம் சி வட்டக் கழக  செயலாளர் 24 வது வார்டு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்கள்.. உடன் கழக முன்னோடிகள் கழக பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்..