“காலு மேல காலு போடு இராவண குலமே” – நடிகை கீர்த்தி பாண்டியன்

நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் *படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது,* இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் மோட்டார் சைக்கிளில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார்.  கதை பிடித்திருந்த்தால் நான் நடிக்க சம்மதித்தேன். இப்படத்தில்  இயக்குநர்  ரஞ்சித்  இருக்கிறார் என்று  தெரிந்ததுமே  எல்லோருமே  என்ன  அரசியல்  பேசத் துவங்கி விட்டீர்களா..??  என்று கேட்கிறார்கள்.  நான் அவர்களைப் பார்த்து பேசினால்  என்ன  தவறு  என்று  கேட்கிறேன்..?  நாம்  உண்ணும்  உணவு  உடை என்று  ஒவ்வொன்றிலும்  இன்று  அரசியல்  இருக்கிறது.  நம்  வாழ்க்கையிலும் அரசியல்  இருக்கிறது.  நாம்  அரசியல்  பேசாமல்  தவிர்ப்பதால்  நம் வாழ்க்கையில்  அரசியல்  இல்லை  என்று  ஆகிவிடாது.  இன்று மிகமிக முக்கியமான நாள்.  இன்று  நாடு  இருக்கின்ற  சூழலைப்  பார்க்கும்போது பாடலாசிரியர்  அறிவு  அவர்கள்  பாடிய  வரிகளின்  படி, “ காலு மேல காலு போடு ராவணகுலமேஎன்று பாடத்  தோன்றுகிறது. ” என்று  பேசினார்.********

*இயக்குநரும்  தயாரிப்பாளருமான  பா.ரஞ்சித்  அவர்கள்  பேசும் போது* இயக்குநர் ஜெய் இந்த இடத்தில்  இந்த மேடையில்  இருப்பது, பேசியது  எனக்கு  மிகவும்  மகிழ்ச்சி  அளிக்கிறது.  ஜெயக்குமார்  எந்தளவிற்கு எமோஷ்னலாக  இருக்கிறானோ  அதே  அளவிற்கு  நானும்  எமோஷ்னலாக இருக்கிறேன்.  இப்படத்தின்  தயாரிப்பாளர்  கணேஷமூர்த்தி  சாருக்கு மகிழ்ச்சி.  எங்கள்  தயாரிப்பில்  உருவாகும்  படங்களில்  எப்பொழுதும் ஏதாவது  பிரச்சனைகள்  இருக்கும்.  ஆனால்  சென்சாருக்கு சென்ற படம் ரிவைசிங்  கமிட்டிக்கு  போய்  திரும்பி வருவது  இது  ஒன்று  தான்.  யுஏதந்திருக்கிறார்கள்.  எடிட்டர்  செல்வா  ஒரு  கமர்ஸியல்  எடிட்டர்.  அவன் இப்படம்  கமர்ஸியலாக  வெற்றி  பெறும்  என்று  கூறினான்.  பார்க்கலாம். இப்படத்தில்  நடிகர்  நடிகைகள்  மற்றும்  தொழில்நுட்பக்  கலைஞர்கள் அனைவருமே  சிறப்பாக  உழைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு  அந்தஉழைப்புக்கு  ஏற்ற  வெகுமதி  வாழ்த்துக்கள்  கண்டிப்பாக  கிடைக்கும்  என்று நம்புகிறேன்.  இப்படம்  மிகச்சிறப்பான  படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜெயக்குமார் எப்படி  மியூசிக்  வாங்கப்  போகிறான்  என்று  நினைத்தேன். நான் தான் இசை உனக்குப்பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்ரு கூறிவிடு, அவர் வேறு ஒன்று தருவார் என்று சொல்லிஅனுப்பினேன். ஆனால்  ஜெய்  மற்றும்  கோவிந்த் வசந்தாவிற்குமான அன்பும்  பிணைப்பும்  புரிதலும்மகிழ்ச்சியளிக்கிறது.  மிகச்சிறப்பான  இசையைக்  கொடுத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.  இன்று  அவரின்  பாடல்கள்  ப்ளூ ஸ்டார்  படத்தின் முகவரியாக  மாறி  இருக்கிறது.  அந்த  உழைப்பிற்கு  நன்றி.  நான்,  இயக்குநர்  ஜெயக்குமார் மற்றும்  தினகர் மூவரும்  நெருங்கிய நண்பர்கள்.  ஒரு  Entrance  தேர்வுக்கான  மையத்தில்  படிக்கப்  போகும்  போது தான்  பழக்கம்  ஏற்பட்ட்து.  கல்லூரியில்  படிக்கும்  காலத்தில்  முதலாண்டில் நான் இயக்குநராக  வேண்டும்  என்று  முடிவு  செய்தேன்.  ஆனால்ஜெயக்குமாரும்  தினகரும்  அனிமேட்டராக  வேண்டும்  என்று  முடிவு செய்தார்கள்.

பின்னர்  நான்  உதவி  இயக்குநராக  பணியாற்றும்  பொழுது,  அவர்கள் இருவரும்  சம்பாதிக்கத்  துவங்கிவிட்டார்கள்.  பின்னர்  நான்  கபாலி  படம் செய்யும் போது,  தினகர்  என்னிடம்  உதவி  இயக்குநராக  பணியாற்ற வந்தான்.  நான்  மிகவும்  கோபப்பட்டேன்.  நீ  அனிமேட்டராக  வேண்டும்என்றுதானே  நினைத்தாய்  என்று  கேட்டேன்.  இல்லை  நான்  இயக்குநராக வேண்டும்  என்று  பிடிவாதமாக  இருந்தேன்.  அதனால்  அவனை  உதவி இயக்குநராக  சேர்த்துக்  கொண்டேன்.  பின்னர்  ஜெயக்குமார்  என்னிடம் காலா  திரைப்படத்தில்  வந்து  சேர்ந்து  கொண்டான்.  என்  நண்பர்கள்என்னிடம்  உதவி  இயக்குநராக  பணியாற்ற  வந்த பொழுது  நான் அசெளகர்யமாக  உணர்ந்தேன்.  ஏனென்றால்  மற்ற  உதவி  இயக்குநர்களிடம் வேலை  வாங்குவது போல்  அவர்களிடம்  வேலை  வாங்க  தயக்கமாக இருந்தது.  ஆனால்  அவர்களுக்கு  எந்த  முன்னுரிமையும்  கொடுக்காமல்  பிற உதவிஇயக்குநர்களை  எப்படி  நடத்துவேனோ  அது  போலவே  அவர்களையும் நடத்தினேன்.

அவர்களும்  அதை  புரிந்து  கொண்டனர்.  ஜெயக்குமார்  இயக்கிய டாக்குமெண்ட்ரியை  பார்ததும்  மிரண்டு  விட்டேன்.  அவனை  நீ  சீக்கிரமே படம் செய்  என்று  உற்சாகப்படுத்தினேன்.  ஆனால்  அவனிடம்  இருந்து  நான் வேறு மாதிரியான படைப்பைத் தான் எதிர்பார்த்தேன்.  அவன் தன்வாழ்க்கையில்  நடந்த  சில  நிகழ்வுகளை  எடுத்துக்  கொண்டு  கமர்ஸியல் லைனில்  ஒரு  படம்  செய்வான்  என்று  எதிர்பார்க்கவில்லை.  அவன் வாழ்க்கையில்  இப்படி  ஒரு  காதல்  இருந்தது,  ப்ருத்வி  செய்த  கதாபாத்திரம் தான் ஜெயக்குமார்  என்பதெல்லாம்  அப்போது  தெரியாது.  தெரிந்திருந்தால்அவனுக்கு  திருமணம்  செய்து வைக்க  இவ்வளவு  கஷ்டப்பட்டு இருக்கமாட்டோம்.  கல்லூரியில்  அவனைப்  பார்க்கவே  பயமாக  இருக்கும்.  என்ன சொன்னாலும் கோபித்துக் கொள்வான். அவனைசமாதானப்படுத்தவே மூன்று நாட்கள் ஆகும்.

எப்பொழுதும்  சுவற்றில்  கைகளால்  குத்திக்  கொண்டு  குங்ஃபூ  பயிற்சி எடுத்துக்  கொண்டிருப்பான்.  தினகரும்  விரைவில்  அவன்  எடுத்து  வரும் படத்தின்  வெளியீட்டு  விழாவில்  உங்களை  சந்திப்பான். கீர்த்தி பாண்டியன் மிக  தைரியமாக  மேடையில்  பேசி  இருக்கிறார்.  அவருக்கு  வாழ்த்துக்கள். இன்று  நம் நாடு மிக மோசமான காலகட்ட்த்தை  நோக்கிப்  போய்  கொண்டு இருக்கிறது.  அதைத்  தடுப்பதற்கு  எவ்வளவு தூரம்  திரைப்படக் கலையைக் கொண்டு  போராட  முடியுமோ,  நாமெல்லாம்  இணைந்து  அதற்காக போராடுவோம்.  படத்தில்  நடித்த  பிற கலைஞர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள்  அனைவருக்கும்  வாழ்த்துக்களும்  நன்றியும். மகிழ்ச்சி.”  என்று பேசினார்.