ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவலுக்கு முன்பேமத்திய பா..ஆட்சியின் தவறானகொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றனஇதன்பிறகுகடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம்அமல்படுத்தப்பட்ட பிறகுநிலைமை இன்னும் மோசமாகிமோடி அரசின்அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின்வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாகவும்ஏற்றுமதியில் இவற்றின் பங்கு40 சதவீதமாகவும் இருந்ததுஅதோடு90 சதவீதம் அமைப்புசாராதொழிலாளர்கள்  பணியாற்றி வந்தனர்இந்த துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது.  கொரோனாவின் இரண்டாவது அலையின் போது குறுசிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைநிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டதுஇரண்டாவது அலைதொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்தநிறுவனங்கள் மேலும் சீரழிவைச் சந்தித்தனமுதல் அலையின் போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால்அறிவிக்கப்பட்ட சலுகைகள் பாதி அளவுக்குக்கூட நிறைவேறவில்லைஅதேபோலஇப்போதைய அறிவிப்புகளும் எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதுகுறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமை என்ன என்பது குறித்ததரவுகளோஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளோ மத்திய அரசிடம் இல்லைஇந்தியாவில் குறுசிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாகஇருப்பதாகவும்இதில் 40 சதவீத நிறுவனங்கள் நிதி ஆதாரம் இன்றி இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் உலக வங்கி அறிவித்த பிறகு 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவித் திட்டத்தை மத்திய அரசுஅறிவித்ததுகுறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாதந்தோறும்மூடப்பட்ட வருவதால்பலரும் வேலை இழந்து வருகின்றனர்உத்தரவாதம் இல்லாத கடனாக ரூ லட்சம் கோடியை இந்தநிறுவனங்களுக்கு வழங்குவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசுஅறிவித்ததுஆனால்அதில் பாதி அளவு கூட வழங்கப்படவில்லைநாடுமுழுவதும் 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளனஇதில் பதிவு செய்யப்பட்டவை 25 லட்சத்து 13 ஆயிரம் மட்டுமேபதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 60 சதவீதம்தமிழ்நாடுமகாராஷ்ட்டிராபீகார்உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளனஇந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள்கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு கைவிட்டதால்தமிழகத்தில் 44 சதவீத குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டைநிறுத்தியுள்ளன. 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள்மட்டுமே நிதி தொகுப்பைப் பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறதுஇது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடப் பலதிட்டங்களை மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறதுஇந்த திட்டங்களையும்கொள்கைகளையும் மாநில அரசுகளுடன்இணைந்து செயல்படுத்திமூழ்கிக் கொண்டிருக்கும் இந்தநிறுவனங்களையும்இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம்பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுமீட்டெடுக்க வேண்டும்தமிழகத்தைப் பொருத்தவரைகுறுசிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழகமுதலமைச்சர் மு..ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்வழக்கம்போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைஅணுகாமல்தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(கே.எஸ்அழகிரி)