நடிகர் ராதாரவி நிச்சயம் இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டித் தருவார்! அப்புக்குட்டி நம்பிக்கை

டப்பிங் யூனியன் தலைவராக மீண்டும் தேர்வான ராதாரவி, நீதிமன்ற தீர்ப்பால் இடிக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடத்தை, மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்டித் தருவார் என, நடிகரும், டப்பிங் யூனியன் உறுப்பினருமான அப்புக்குட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டப்பிங் யூனியன் தலைவராக தேர்வான ராதாரவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் அப்புக்குட்டி, யூனியனுக்கு ராதாரவி தலைமையில் புதிய கட்டிடம் விரைவில் அமைவது உறுதி என்றார்!*******