பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’

கடலோர கவிதைகள்புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்குமிரியம்மாஎன பெயரிடப்பட்டிருக்கிறதுமாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம்மிரியம்மா‘. இதில்மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதாசம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவுசெய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு . ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.*********

படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளையாத்திசைபுகழ் ரஞ்சித்மேற்கொள்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும்பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.  திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபதுஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக.. அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில்நடிப்பதால், ‘மிரியம்மாபடத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே.. இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்புரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.