தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம்முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக்காணிக்கை‘ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள்அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்குவந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப்பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும்விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றைவிதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில்வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரியநல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) ”ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிடசமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்றசமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்யஎனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும்வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டுதொண்டாற்றி வருகிறேன்” என்றுஅறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் தந்தை பெரியார்அவர்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி) ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையேஅடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம்தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் மானமும்அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலகஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்தியபோராட்டங்கள் யாராலும் ‘காப்பி‘ அடிக்க முடியாதபோராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும்எழுதத் தயங்கும் எழுத்துக்கள்; அவர் பேசியபேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர்நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்;தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனதுஎதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்தநடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர்நடத்திய மாநாடுகள், அவர் நடத்தியபோராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்தமாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப்பேச வேண்டும். “மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” – இவைஇரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகியஇரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன.  அந்த இரண்டுக்கும்எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவைஅனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக்கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத்தூண்டினார்.  அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம்சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர்உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம்சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கிஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில்மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியாமுழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள்விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்டஅடித்தளமே காரணம். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாதஅவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது.சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரதுசிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்தமாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனதுசிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும்அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.  ‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தைபெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்தகாலம்தான்‘ என்று நம்மையெல்லாம் உருவாக்கியபேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். ”பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்”  என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி) பேரறிஞர் பெருந்தகையும், தலைவர் கலைஞர் அவர்களும் உருவான குருகுலம்பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப்பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைஉருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துக்களைத்தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதேகொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை …

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர்இராதாகிருஷ்ணன பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000/-க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர். அந்த வகையில், 2020-2021ஆம் கல்வியாண்டில்அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்த379 ஆசிரியர்கள், மாநிலக் …

சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். Read More

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே பேசியிருக்கக்கூடிய பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள்,  அயோத்தியதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்; நன்றியும்தெரிவித்திருக்கிறீர்கள்;  பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள்.   அதேநேரத்தில், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஈஸ்வரன் அவர்கள், வ.உ.சி. அவர்களுடைய 150ஆவது …

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் Read More

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.  எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்,வேலைவாய்ப்பிற்கும் …

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார் Read More

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்: மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் …

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது …

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் Read More

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால் நீங்களெல்லாம், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களிடத்தில்,அவர் குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச …

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின் Read More

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஏதோ எங்களை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு நீங்கள் அந்தக் கருத்தைச் சொல்கிறீர்களா’ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பினார். இந்தத் தீர்மானத்தில்கூட ‘ஒருமனதாக’ என்றுதான் போட்டிருக்கிறோம். நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.  நீங்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ளவாசகத்தைக்கூடப் பார்க்கலாம். அந்தத் தீர்மானத்தினுடைய வாசகத்தில் ‘ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றுதான் …

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள் Read More

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் முதல்வர் ஸ்டாலின்

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு. இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் புதிதாகக் கட்டித் தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் …

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் முதல்வர் ஸ்டாலின் Read More

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. …

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு. Read More