கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை

உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.  கொங்கன் மற்றும் கோவாவின் சில இடங்களிலும், மேற்கு உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை பாயும் …

கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை Read More

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல்

நாள்பட்ட இடுப்பு வலி, யோகா மூலம் குறைவது, எய்ம்ஸ்டாக்டர்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம்,  வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின்நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும்ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்புவலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல்நெகிழ்வுதன்மையை  அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.  நாள்பட்ட இடுப்பு வலியில்,  யோகாவின் தாக்கத்தைமதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல்துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறைஉதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.  3 ஆண்டுகளாக இடுப்பு வலியால் அவதிப்படும் 50 வயதுநோயாளிகள் 100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 வாரங்கள் மேற்கொண்ட முறையான யோகாபயிற்சிக்குப்பின்,  அவர்களிடம் உணர்வு அளவீட்டுபரிசோதனை (QST) மேற்கொள்ளப்பட்டது. இதில்குளிர்காலத்தில் ரத்தம் ஓட்டம் குறைவால் ஏற்படும் இடுப்புவலி குறைந்துள்ளது. வலியை தாங்கும் சகிப்பு த் தன்மை அதிகரித்துள்ளது. நோயாளிகளிடம்  பெருமூளையின்செயல்பாடுகள் உற்சாகம் அடைந்து, நெகிழ்வுதன்மைகுறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.  நாள்பட்ட இடுப்பு வலியுள்ள நோயாளிகள், 4 வாரங்கள்யோகா பயிற்சி மேற்கொண்டபின், வழக்கமானசிகிச்சையை விட வலி குறைந்துள்ளது, முதுகுத்தண்டின்நெகிழ்வு அதிகரித்துள்ளது. வீட்டில் நீண்ட காலம் யோகா செய்தால், செலவில்லாமல் அதிக பலன்களை பெற முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது வலியை மட்டும் போக்காமல், ஒட்டுமொத்த வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி, சுகாதார பலன்களை அளிக்கிறது.

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல் Read More

நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்கள்: புனேவைச் சேர்ந்த புதுமை நிறுவனம் உருவாக்கியது

முப்பரிமாண அச்சிடுதல் மற்றும் மருந்துத்துறையின் ஒருங்கிணைப்பில் நுண்கிருமித் தொற்றுக்களை அழிக்கும் புது விதமான முகக் கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புனேவில் உள்ள தின்கர் டெக்னாலஜிஸ் இந்தியா என்ற புதுமை நிறுவனம், வைரசைட்ஸ் (virucides) என்று அழைக்கப்படும் நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்களைத் தயாரித்துள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு …

நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்கள்: புனேவைச் சேர்ந்த புதுமை நிறுவனம் உருவாக்கியது Read More

முதன்முறையாக பீகாரிலிருந்து இங்கிலாந்திற்கு ஜர்தாலு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது

கிழக்கு பிராந்தியத்தின் வேளாண் ஏற்றுமதிகளுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் விதமாக, புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்ற ஜர்தாலு மாம்பழங்கள் பிகாரில் இருந்து இங்கிலாந்துக்கு வர்த்தக ரீதியில் முதல் முறையாக இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.  லக்னோவில் உள்ள அபேடாவின் பேக்கிங் மையத்தில் இருந்து பிகார் அரசு, இந்திய …

முதன்முறையாக பீகாரிலிருந்து இங்கிலாந்திற்கு ஜர்தாலு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது Read More

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம்பிடித்துள்ளது

QSஉலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின்  பல முக்கிய பணிகள் – கல்வியாண்டு தேர்ச்சி  விகிதம்/நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை/அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல்2022 சமீபத்தில் வெளியிட்டது  இதில் புதுவை பல்கலைக்கழகம்  801 முதல் 1000 வகைகளுக்கு (category) இடையில் தரவரிசை பெற்ற …

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம்பிடித்துள்ளது Read More

காதி பிரக்ரிதிக் பெயின்ட் பெயரில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை

காதி பிரக்ரிதிக் பெயின்ட் என்ற பெயரில் போலி வண்ணப்பூச்சுக்களை விற்ற நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பசுஞ் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தனித்துவமான வண்ணப்பூச்சை காதி நிறுவனம் தயாரித்தது. இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தார். …

காதி பிரக்ரிதிக் பெயின்ட் பெயரில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை Read More

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்த போதும், பெலகாவி, சிக்மகளூரு, தட்சிணா …

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு Read More

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் மும்பையின் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 9- பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. …

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு Read More

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென்கிறார் டாக்டர் குழந்தைசாமி

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது.  மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம். அதிலும் பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.  கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான …

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென்கிறார் டாக்டர் குழந்தைசாமி Read More

காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு

செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர். புயலை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  உயிர்சேதம் மற்றும் பொருள் சேதத்தைதவிர்க்க முடியும். இதுவரை, தொலை உணர்வுசெயற்கை கோள்கள் மூலம் புயுல் உருவாவது முன்கூட்டியேகண்டறியப்பட்டு வந்தது. வெப்பமான கடலின் மேல் பரப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதிஉருவான பின்பே, செயற்கைகோள் படங்கள் மூலம் இவற்றை அறிய முடியும். இந்தகண்டுபிடிப்புக்கும், புயல் தாக்குவதற்கும் அதிக இடைவெளி இருப்பது, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாவதை செயற்கைகோள்படம்பிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் உருவாகிறது. இந்த புயல் சுழல்தான், காற்றழுத்ததாழ்வு பகுதியை உருவாக்கும் முக்கிய அம்சம். இந்த காற்றுச்சுழலை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை காரக்பூர் ஐஐடி விஞ்ஞானிகள்ஜியா ஆல்பர்ட், விஷ்ணுப்பிரியா சாகு மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இவர்களின் ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும்தொழில்நுட்பதுறையின் கீழ் உள்ள பருவநிலை மாற்ற திட்டம் (CCP) உதவியது. இந்த காற்றுச் சுழலை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் மூலம் வடஇந்திய பெருங்கடல்பகுதியில் உருவாகும் புயல்களை செயற்கைகோள் கண்டறிவதற்கு முன்பே கண்டறியமுடியும். இந்த ஆய்வு கட்டுரை ‘அட்மாஸ்பெரிக் ரிசர்ச்’ என்ற இதழில் சமீபத்தில்வெளியாகியுள்ளது

காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு Read More