தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 தாம்பரம் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம்இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய புகைப்பரப்பும்இயந்திரங்கள் மற்றும் 14 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டுகொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்காக்கள்,சாலைகள் பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. திறந்த நிலையில் உள்ளகிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும்காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன.

தாம்பரம் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் 182 இடங்களில் மாநகராட்சி களப்பணியாளர்கள்மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 47 கட்டுமான இடங்களில் கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிப் பணியாளர்களால்மேற்கொள்ளபட்ட களஆய்வில் 1456 இடங்களில் கொசுப்புழு உருவாவதற்கு வாய்ப்புள்ள பயன்பாடற்ற 194 டயர்கள், 2112 தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20,000 அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.  

எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும்வாய்ப்புள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுத்திட வேண்டும். கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுக்கள் மற்றும்கொசுப்புழு புகாதவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்கவேண்டும்.

மேலும், நீர் வழித்தடங்கள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களின் அருகே குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.