தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்து

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவை  சந்தித்து சித்திரை திருநாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தார்கள்.  மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்துக்கு வாழ்த்தும்  தெரிவித்தார்கள். அப்போது இளையராஜாவிடம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை  சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவசியம் சந்திப்போம் என்று அவரும் சிரித்த முகத்துடன் நம் கோரிக்கையை ஏற்றார்.  பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் அன்பு பரிசாக  முருகன் சிலையும், ரமணர் ஓவியமும்,  அவர் பெயரில்  அர்ச்சனை செய்த வடபழநி  கோயில் பிரசாதமும் வழங்கினார்கள். சந்திப்பு இனிதே நட ந்தது. இந்நிகழ்வுக்கு  உறுதுணையாக இருந்த டைமண்ட் பாபு,  இளையராஜாவின் மேலாளர் ஶ்ரீராம் ஆகியோருக்கு சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.