தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் மொத்தம் 36,28,257 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும்மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில், முதன்மை செயலாளர் /சுற்றுலா ஆணையர்மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் /மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா...., ஆகியோர் முன்னிலையில் (30.1.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றனர்.இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில்தெரிவித்ததாவது, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவு விடுதிகள், சுற்றுலாபயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் எனகுறைந்த செலவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகின்றது. முதலமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளின் விருப்பமான முதன்மை மாநிலமாகஉருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். சுற்றுலா கொள்கை 2023- வெளியிட்டு, சுற்றுலாத்துறையில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளைஅறிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும்வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும்வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காதஅனுபவங்களை அளித்து வருகின்றன. 2022 – 2023 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்கள் மூலமாக இயக்கப்படும் படகுகளில் மொத்தம் 42,22,945 சுற்றுலாபயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

2023 – 2024 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் மட்டும் மொத்தம்36,28,257 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுலா பயணிகளைகவரும் வகையில், படகு சவாரி மேற்கொள்ள படகு குழாம்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும் ஓட்டல்தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்களுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு சிறந்தசேவையை வழங்கி அவர்களுடைய முதலாவது விருப்பமான தேர்வாக ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள்மற்றும் அமுதகம் உணவகங்களை உருவாக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று சுற்றுலாத்துறைஅமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் .கமலா உள்பட சுற்றுலாத்துறைஅலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.