தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியும், பத்திரிக்கைப் பணியும் தொடர்ச்சியாக செய்துவரும் திருச்சி இனிய கந்தவனம் சஞ்சிகை ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனினுக்கு திருகோணமலை  ‘வாசல்இலக்கிய வட்டம் கலைக்கேசரிவிருது வழங்கி கெளரவித்துள்ளது

திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த வாசல் கவிதைக்கான சஞ்சிகை வெளியிட்டு விழாவில் திருகோணமலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ. பார்த்திபன் விருதினை  நந்தவனம் சந்திரசேகரனுக்கு வழங்கினார் வாசல் சஞ்சிகை பிரதம ஆசிரியர் திருச்செந்தூரன் விழா அனைத்து ஏற்பாடுகளைச் சிறப்பாக  செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.