தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன்

ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில்  அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநிலஅரசிலும் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு ஒரே மாதிரியாக ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும் நிலையில், பணி ஓய்வின்போது ஒன்றிய அரசு மருத்துவர்களை விட மாநில அரசு மருத்துவர்களுக்கு ரூ.45,000 குறைவாகவழங்கப்படுகிறது.

குறிப்பாக, 4,9,13,20 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு மருத்துவர்கள் காலம் ஊதிய உயர்வும், பதவி உயர்வும்பெறுகின்றனர். இதன் விளைவாக, 7வது ஊதியக் குழுவில், 13 ஆண்டுகள் முடித்து 14வது ஆண்டில்ரூ.1,23,000, ஒரு ஒன்றிய அரசு மருத்துவர் அடிப்படை ஊதியமாக பெறுகின்றார்.

ஆனால், தமிழ்நாட்டில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு மறுக்கப்படுவதால், ஒரு ஒன்றிய அரசு மருத்துவர், 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, நம் மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், ஒன்றியத்தில் 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை 17 ஆண்டுகள் கழித்தும், ஒன்றியத்தில் 13 ஆண்டுகள் கழித்தும்பெறுகின்ற ஊதிய உயர்வை, நம் மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற சூழ்நிலைநிலவுகிறது.

இதன் காரணமாக, ஒன்றிய அரசு மருத்துவர் 13 ஆண்டுகளில் பெறுகின்ற ரூ.1,23,00 அடிப்படை ஊதியமாகபெறுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் ரூ.86,000 மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகின்றனர்.

அதாவது, ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும்காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகியஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் இந்த ஊதிய முரண்பாட்டுக்கு காரணம்.

இந்த அநீதிக்கு, அரசாணை எண் 354இல் உள்ள எதிர்கால சரத்துகளைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும். ஆனாலும், இந்தக் கோரிக்கை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்குக் காரணம் அரசு மருத்துவர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு  அரசின் கடமையாகும். திமுக ஆட்சியில் தங்களின்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் நம்பி இருக்கின்றனர்.

எனவே,  தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில்காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அரசுமருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு, கல்வி தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடும் மருத்துவர்கள் மீது போடப்பட்ட பழிவாங்கல்நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கைவிடுக்கிறது.