அண்ணாமலை கும் பிஜேபி கட்சிக்கும் வன்னியர்கள் வாக்குகள் தேவை இல்லையா? – விருதாம்பிகை

எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே ஆனால் இன்று திரு.அண்ணாமலை அவர்கள் வரலாறு தெரியாமல் வன்னியர் மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி  அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட உள் இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் வன்னியர்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது  என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த பொழுது  அப்பொழுதும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் இதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். தமிழ்நாட்டின் மிகப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை திரு. அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பது நல்லதல்ல. வன்னியர் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று திரு.அண்ணாமலை அவர்களையும் பிஜேபி கட்சியை யும் நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை மேலும் எங்களை துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
 
 நம் 3 கோடி வன்னியர் குல சத்திரியர்களை நான் கேட்டுக்கொள்வது. நாம் அனைவரும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் நீங்கள் அனைவரும் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கலாம். நமது உரிமைகளுக்கு எதிராக  யார் பேசினாலும் அவர்களை கட்சி பாகுபாடு இன்றி எதிர்ப்பது நமது கடமை.  எனவே நம் வன்னியர் மக்கள் மிஸ்டர் திரு.அண்ணாமலை அவர்களையும் பிஜேபி கட்சியும் புறக்கணிக்க வேண்டும் என்று உங்கள் மாவீரன் காடுவெட்டியார் மகளாக கேட்டுக்கொள்கிறேன்.