அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர்
தாமோ. அன்பரசன் முன்னிலையில் நடைப்பெற்றது. நிகழ்வில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.