பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.!

சென்னை, ஜூலை. 15: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கி.மி சைக்கிள் பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஸ்ரீபெரம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.  செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.