தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்!

திருச்சி, ஜூலை. -13: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக, படித்த மாற்றுத்திறனாளிகள் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக “தாலி தங்கம்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தங்க தாலியை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு,
பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார். இந் நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.