துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.08.2020 அன்று கூட்டுறவுத் துறையின் சார்பில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு நிதியுத வியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு தமிழகம் முழுவதும்; கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்குகென பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அறிவுரையின்படி அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனா நோய் தொற்று நடவடிக் கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதி களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அறிகுறி தென்படுபவர்களை கண்டறிந்து அவர் களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் அறிகுறி தென்படுபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களை அணுகி உரிய பாpசோதனை மேற்கொண்டு தம்மைச் சார்ந்த வர்களுக்கும் நோய் தொற்று பராவாமல் இருக்கவும் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியினை கடைபிடித்து சரிவர முககவசங்களை அணியவும் மாவட்ட நிர்வாக த்தின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும் பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக் குடன் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் 489 நியாய விலைக் கடைகள் மற்றும் மகளிர் அமைப்புகள் மூலம் நடத்தப்படும் 28 நியாய விலைக் கடைகள் ஆக மொத்தம் 517 நியாய விலைக் கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக 228 நியாய விலைக் கடைகளில் 213263 குடும்ப அட்டைகளைச் சாh;ந்த 640832 குடும்ப உறுப்பினர்களுக்கு 1282000 விலையில்லா முககவசங்கள் வழங்கும் நிகழ் வினை இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் தமிழக அரசு சிறுபான்மையினர் மக்களின் கல்வி சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளை பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் நோக்கத் திலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும் கல்வி கடன் மற்றும் தொழில் கடன் போன்ற பல்வேறு திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்துவ இஸ்லாமிய சீக்கிய புத்த பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சார்ந்த மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (டாம்கோ) சார்பில் பல்வேறு கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய மதத்தை சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முஸ்லீம் உதவும் சங்கம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு இணையாக ஒவ்வொரு சங்கத்தி ற்கும் அதிக பட்சம் ரூ.20 இலட்சம் வரை தமிழக அரசால் இணை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசு முஸ்லீம் சுய உதவி குழுவினர்களுக்கு சிறு தொழில் தொடங்கிடவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் 1:1-ஆக இருந்த நிதியுதவினை தற்சமயம் 1:2 பங்காக உயர்த்தி வழங்கி வருகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூகம் பொருளா தாரம் மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றம் அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பணியாளர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 2019-20-ஆம் ஆண்டில் தேனி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் ரூ.1000000 (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) நன்கொடை தொகை வசூல் செய்து அதற்கு இணை மானியம் கோரி அனுப்பப்பட்ட முன்மொழிவினை ஏற்று ரூ.2000000 (ரூபாய் இருபது இலட்சம் மட்டும்) இணை மானியம் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் தேனி மாவட்ட முஸ்லீம் மகளிh; உதவும் சங்கத்தின் மூலம் பின் தங்கிய நிலையில் உள்ள 400 முஸ்லீம் மகளிh;களை தோ;வு செய்து சிறு தொழில் செய்ய தலா ரூ.7500ஃ- வீதம் ரூ.30.00
இலட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த சங்கத்தின் மூலம் 2011 -ஆம் ஆண்டு முதல் 2020 – ஆம் ஆண்டு வரை 3921 முஸ்லீம் பெண்களுக்கு சிறுதொழில் தொடங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக ரூபாய் 2.28 கோடி வழங்கப் பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் மாவட்ட முஸ்லீம் மகளிh; உதவும் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவிக்கான காசோலையினையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் இன்றைய தினம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எம்.ஏகாம்பரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.நிறைமதி மாவட்ட வழங்கல் அலுவலர் இ.கார்த்திகாயினி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் பொன்ராஜ் கொந்தாலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.