ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 18: அருள்மிகு ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன். அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், ரோப்கார் கமிட்டி சேர்மேன் தொழிலதிபர் பெங்களூர் எம். பூபாலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டார்கள்.