தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.!

இராமநாதபுரம், ஜூலை. 18: இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தார்களை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி குடும்பத்திற்கு தலா 5000 வீதம் நிதி உதவி வழங்கினார். மீண்டும் விபத்துகள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.