100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

கடலூர் 29, மே:- கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வந்தடைந்தது அதை நேற்று கடலூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மருத்துவத்துறை உயரதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.