சென்னை பெருநகர காவல், நிர்வாக அதிகாரி .A.ரமேஷ், 4 காவல் ஆய்வாளர்கள், 1 கண்காணிப்பாளர் (அமைச்சுப்பணியாளர்), 1 உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 44 காவல் உதவி ஆய்வாளர்கள், 33 சிறப்பு உதவிஆய்வாளர்கள் மற்றும் 1 காவல் நிலைய தூய்மைபணியாளர் என மொத்தம் 86 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் (31.05.2025) பணி ஓய்வுபெற்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின் பேரில் 30.05.2025 வேப்பேரி, சென்னை பெருநகரகாவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர்கள் (தெற்கு) N.கண்ணன், இ.கா.ப. ,மற்றும் G.கார்த்திகேயன், இ.கா.ப (போக்குவரத்து) ஆகியோர் சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.05.2025 அன்று ஓய்வு பெற்ற 86 காவல்துறையினர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலா. சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகரகாவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஓய்வு பெறுகின்றகாவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்புஅளித்தமைக்காக நன்றி தெரிவித்தும், பணி ஓய்வுபெறுகின்ற காவல் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களதுஉடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்கவேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள்திரு.D.N.ஹரிகிரண் பிரசாத், இ.கா.ப, (நலன் மற்றும்எஸ்டேட்), திருமதி.சுப்புலட்சுமி, இ.கா.ப, (நிர்வாகம்)காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறுகின்ற காவல்அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.