தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் சங்கர் ஜிவால், இ.கா.ப., தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவருடன் காவல்துறை தலைமை அலுவலக உயர. அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்திய காவல் அறக்கட்டளை ஒரு தன்னிச்சையான, பல்துறை வல்லுநர்கள் அடங்கிய முதன்மையான சிந்தனைக்குழுவாகும், இது காவல் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள் (பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) அடங்கியபுகழ்பெற்ற கல்வி ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பு, குடிமைப்பணி அதிகாரிகள் அடங்கிய குழுவால்நிர்வகிக்கப்படுகிறது, இந்தியாவில் காவல் பணியைமேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன்செயல்படுகிறது. இந்த அமைப்பு திரு. N. ராமச்சந்திரன், முன்னாள் காவல்துறை இயக்குநர், மேகாலயா, என்பவரால்நிறுவப்பட்டதாகும். தற்போது திரு. ஓம் பிரகாஷ் சிங் இ.கா.ப.,(முன்னாள் காவல்துறை இயக்குநர் , உத்திரபிரதேசம், CISF மற்றும் NDRF) இதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரியாக உள்ளார். டாக்டர் இஷ் குமார் இ.கா.ப., (முன்னாள் காவல்துறை இயக்குநர், விஜிலென்ஸ், தெலுங்கானா மற்றும் காவல்துறை இயக்குநர் NCRB), துணைத் தலைவராகவும், துறை சார்ந்த சீர்திருத்தத் திட்ட இயக்குநராகவும் உள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை தனது சமூக ஈடுபாட்டின் மூலம்குடிமக்களுக்கு சேவையை உறுதிசெய்துவருகிறது..பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குதல் மற்றும் காவல்நிலையங்களில் குறை தீர்க்கும் நடைமுறையை மேம்படுத்துதல்ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்த்து சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வழிவகைசெய்கிறது. பெண்கள்பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும்காவல்துறையின் பணி சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில்இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும்.
இந்த துறை சார்ந்த சீர்திருத்தத் திட்டமானது ஆவடிகாவல் ஆணையரகத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 15 காவல்நிலையங்களிலும் நடத்தப்படும். இத்திட்டத்தில்புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள், குடிமக்களில் சேவை வேண்டுவோர், அரசுசாரா நிறுவனங்கள், அரசு மற்றும் காவல்துறை பணியாளர்கள்உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அடங்கிய பொது ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் காவல்துறை கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதிகளைஅடையாளம் காணவும், காவல்நிலையாணை கையேட்டில்மாறுதல்கள் கொண்டுவரவும், காவல் பணியாளர்களுக்குபயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது. இத்திட்டம் ஒருவருடத்திற்கு அமலில் இருக்கும், பொதுவான நபர்களைகொண்டு தணிக்கை மேற்கொள்ளப்படும். அதன்அடிப்படையில், முன்மொழியப்பட்ட பரிந்துரைகள்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும்தெலுங்கானா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான மாநில தொடர்பு அதிகாரியாகமுனைவர். பா. சாமூண்டிஸ்வரி இ.கா,ப., காவல்துறைதலைவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறைஅவர்களும் மற்றும் மேற்பார்வையாளராக ஓய்வு பெற்ற காவல்கண்காணிப்பாளர் திரு. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களும்நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக 5 வது காவல்ஆணையரின் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற, திரு. ராதாகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்ட துவக்க விழாவில் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப.,தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்களுடன் காவல்துறை தலைமை அலுவலக உயர்அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.