சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது

சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடிய உம்ரா, ஹஜ் பயணிகள் மற்றும் வேலைக்காக செல்பவர்கள் நேரடியாக செல்வதற்கு முதல் விமான சேவை இன்று சென்னையில் இருந்து துவங்குகியது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இந்திய ஹஜ் அசோசியேசன்  சார்பில் அதன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.  இந்த விமானம்  ஐந்தரை மணி நேரத்தில் சவுதி ஜித்தா சென்றடையும்.  இதற்கான முதல் விமான சேவை புதன்கிழமை 27.12.23 இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து சென்றது. இந்த விமானத்தில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கரும்  பயணிகளுடன் சவுதி அரேபியா ஜித்தா சென்றார்.