தங்கம் குழும நிர்வாக இயக்குனருடன் சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 24: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா திருமண அழைப்பிதழை, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கத்தை …

தங்கம் குழும நிர்வாக இயக்குனருடன் சந்திப்பு! Read More

கோவையில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி  தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி விவசாயி …

கோவையில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் Read More

கோவையில் கலப்பட டீசல் லாரி பறிமுதல்

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில்கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைகாவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.ஆபாஸ்குமார், இ.கா.ப.,அவர்களின் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள்திரு.ஸ்டாலின், திரு.பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில்காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில்கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.  கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாகமொத்தம் 07 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26400 லிட்டர்கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த 05 டேங்கர் லாரிகள் மற்றும் 03-Tata Ace வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளசந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் 13.08.21ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர்பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார்03.00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த TN-49-AM 9978 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர்அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஓட்டுநர்மதியழகன் (47) த.பெ. ராஜு மற்றும் க்ளினர் செல்வம் (26) த.பெ.சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  ​அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி. சாவடி எட்டிமடை கே.பி.எஸ்குடோன் அருகில் 12.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 4000 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 88 F 8767 மற்றும் TN 38 U 3594 என்றTATA ACE வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் சபாபதி மற்றும்செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும்சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த 05.08.21 ம் தேதி வாகனத்தணிக்கையில் 1350 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 39 CD 2323 மற்றும்Steel barrel பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரிபேக்கரி முன்பு 06.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 17050 லிட்டர் ஏற்றி வந்த லாரிகள் TN 34 L 0378, KA 01 AE 7577 மற்றும்TN 29 BD 1393 என்ற TATA ACE வாகன ஓட்டுனர்கள் கலப்பட டீசல்உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும்பழனிசாமி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல்தொட்டிப்பட்டியில் 25.06.21 ம் தேதி 7000 லிட்டர் கலப்பட டீசலைஏற்றி வந்த லாரி TN 18 S …

கோவையில் கலப்பட டீசல் லாரி பறிமுதல் Read More

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாதசுதந்திரப் போராட்ட வீரர்கள்நினைவு கூறப்பட்டனர்

இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும்வகையில், ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாதநாயகர்கள்’ என்ற தலைப்பிலான இணையகருத்தரங்கை, மத்திய அரசின் தகவல் மற்றும்ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு துறைஅலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகத்துடன்இணைந்து நடத்தியது.  சுதந்திர போராட்ட இயக்கத்தின் போற்றப்படாதநாயகர்களை வாழ்த்தி பேசிய, சென்னை கிறிஸ்த்துவகல்லூரியின், வரலாற்றுத்துறை உதவி போராசிரியர்டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின், சுப்பிரமணிய சிவா, டி.எம்.கலையண்ணன், யகுன் ஹாசன் சயீத் மற்றும்லட்சுமி சாகல் போன்ற தலைவர்கள் குறித்து பேசினார். சுத்த தமிழ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான, திருசுப்பிரமணிய சிவா, தனி தமிழ் இயக்கத்தைதோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம்பிரபலப்படுத்தினார்.  அவர் வஉசி மற்றும் பாரதிஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.  திலகரின்கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களைவன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவாஊக்குவித்தார். சென்னை சிறையில் முதல் அரசியல்கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல்தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில்பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்குஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்குவெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவாவற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைமேலும் மோசம் அடைந்தது. திரு கலையண்ணன் பற்றிபேசிய டாக்டர் மர்லின், காந்தியவாதியானகலையண்ணன், இந்திய தேசிய காங்கிரஸில் தனது 19ம்வயதில் இணைந்தார் என கூறினார். வெள்ளையனேவெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர், கடந்த1949ம் ஆண்டு சட்டசபையில் இளம் உறுப்பினர் ஆனார். அவர் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தார். சேலம் பகுதியில், அவர் சுமார் 1000 பள்ளிகளைதொடங்கினார் மற்றும் நலத்திட்ட பணிகளில் தீவிரமாகஈடுபட்டார்.  யகூப் ஹாசன் சயீத் பற்றி கூறுகையில், அவர் நாக்பூரில் பிறந்து சென்னைக்கு 1901ம் ஆண்டுவந்தார் என டாக்டர் மர்லின் கூறினார். முஸ்லிம் லீக்அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் அவரும் ஒருவர். தொழிலதிபரான இவர், இந்திய தேசிய காங்கிரஸில்1916ம் ஆண்டு இணைந்தார். பல முறை இவர் கைதுசெய்யப்பட்டார்.  இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து1923ம் ஆண்டு விலகிய யகூப் ஹாசன சயீத், சென்னைமாகாண முஸ்லீம் லீக் அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸில் மீண்டும் இணைந்த அவர், ராஜாஜிதலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றார். ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம்ஆகியவற்றிலும் இங்கு பங்கெடுத்தார். திருமிகு லட்சுமிசாகல் பற்றிய பேசுகையில், அவர் கேப்டன் லட்சுமி எனஅறியப்பட்டார் என டாக்டர் மர்லின் கூறினார். மருத்துவரான லட்சுமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால்தூண்டப்பட்டார். கடந்த 1940ம் ஆண்டு, அவர் சிங்கப்பூர்சென்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துகேப்டன் ஆனார். சுபாஷ் சந்திர போசுடன் இணைந்துஅவர் ஜான்சி ராணி படைப்பிரிவை ஏற்படுத்தினார். பர்மாவிலிருந்து இந்திய தேசிய ராணுவம்பின்வாங்கியதும், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர் இந்தியா அனுப்பப்பட்டார்.  சுதந்திரத்துக்குப்பின் சமூக சேவைக்காக தனது வாழ்வைஅவர் அர்ப்பணித்தார். கடந்த 1971ம் ஆண்டு, வங்கதேசஅகதிகளுக்காக அவர் நிவாரண முகாம்களைநடத்தினார். போபால் விஷ வாயு தாக்குதல்சம்பவத்துக்குப்பின் அவர் மருத்துவக் குழுவுக்குதலைமை தாங்கி சென்றார் என டாக்டர் மர்லின்கூறினார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின், வரலாற்றுத்துறைஉதவிப் போராசிரியர் டாக்டர் சி. ஜெயவீரதேவன், பாளையக்காரர்கள் காலத்து இளம் நாயகர்கள், பலரதுபெயர் தென் தமிழகத்தில், இன்னும் பலருக்குவைக்கப்படுவது பற்றி கூறினார்.  செவல் பாளையத்தைசேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், பூலித்தேவனுடன் இணைந்து கிழக்கு இந்தியகம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார். பூலித்தேவன் இறந்த பிறகு, அவரது குழந்தைகளைபராமரித்த ஒண்டிவீரன் கட்டபொம்மன் மற்றும்ஊமத்துரையுடன் இணைந்து சுதந்திர இயக்கத்துக்காகபோராடினார். ஊமத்துரையுடன் கலந்து கொண்டபோரில் அவர் உயிரிழந்தார்.  சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின்நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்த குயிலிகுறித்தும், உதவிப் போராசிரியர்  சி. ஜெயவீரதேவன்விளக்கினார்.  வேலு நாச்சியாருடன் இணைந்து, ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எவ்வாறு போரிட்டார்என்பதை அவர் விளக்கினார். சுதந்திர இயக்கத்தின்முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்கஉடலில் தீ வைத்துக் கொண்டார். மற்றொருகுறிப்பிடத்தக்க வீரர், கருப்பு சேர்வை. இவர் தீரன்சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் திப்புசுல்தானுடன் இணைந்து பயிற்சி பெற்றவர். கடந்த1805ம் ஆண்டு, இவர் தீரன் சின்னமலையுடன் சேர்த்துகைது செய்யப்பட்டார். பின் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈரோடு மாவட்டம், நலமங்கா பாளையத்தைச் சேர்ந்தபொல்லன் மாதாரி குறித்து பேசிய, டாக்டர்ஜெயவீரதேவன், தீரன் சின்னமலையுடன் இணைந்துஅவர் அனைத்து போரிலும் பங்கெடுத்தார். தீரன்சின்னமலையை பாதுகாப்பதில், அவர் சிறந்த ஒற்றனாகதிகழ்ந்தார். 1805ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.  தலைமை உரையாற்றிய, சென்னை, மண்டல மக்கள்தொடர்பு இயக்குனர் ஜே.காமராஜ், இந்த பெருந்தொற்றுகாலத்தில், 9 கள விளம்பரத்துறை அலுவலகங்கள், பலதலைப்புகளில் பல நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடத்துகின்றன என கூறினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழாவைமுன்னிட்டு, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்பற்றி, இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்படுகிறதுஎன அவர் கூறினார். போற்றப்படாத வீரர்களைகவுரவித்து பிரபலப்படுத்தும் முயற்சியாக, சுதந்திரஇயக்கத்தைச் சேர்ந்த 140 தலைவர்களை மத்திய அரசுஅடையாளம் கண்டுள்ளது. அவர்களின் நினைவாக, நாடுமுழுவதும் முதல் கட்டமாக, 75 சிறப்பு நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நடத்தப்படுகின்றன.  சென்னை மண்டல மக்கள் தொர்பு அலுவலகத்தின்களவிளம்பர அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர், வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள், போராசிரியர்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஅமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில்பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  படவிளக்கம்:  சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடநடத்தப்பட்ட  ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாதநாயகர்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கியபேச்சாளர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் உதவிபேராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின்.    சிறப்பு விருந்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழகவரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர்சி.ஜெயவீரதேவன்.  தலைமை உரையாற்றும் சென்னை மண்டல மக்கள்தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு. ஜே.காமராஜ்.

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாதசுதந்திரப் போராட்ட வீரர்கள்நினைவு கூறப்பட்டனர் Read More

தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனுடன் புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 15: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனை நேரில் சந்தித்து வழங்கினார், எழுத்தாளர் அன்பழகன் உடன் …

தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனுடன் புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு! Read More

முன்னாள் அமைச்சர்களுடன்; புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 12: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை …

முன்னாள் அமைச்சர்களுடன்; புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு! Read More

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் …

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி Read More

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., 11.08.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு …

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர் Read More

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை, ஆகஸ்ட். 11: தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆலோசகர் உடன்குடி கார்த்திக் – கனிமொழி ஆகியோரது மகன் காலேப் ஜோஸ்வாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் உள்ள தன்வந்த் ஹாலில் …

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு Read More

வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 8: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை நேற்று முன்தினம் அவரது இல்ல அலுவலகத்தில், திமுக சிறுபான்மை …

வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து! Read More