சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நூலகம்” அமைவது அ.தி.மு.க.விற்குகசக்கிறது – எ.வ.வேலு

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்” என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிசாமியும் அறிக்கை என்ற …

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நூலகம்” அமைவது அ.தி.மு.க.விற்குகசக்கிறது – எ.வ.வேலு Read More

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி ‘அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு …

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன் Read More

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றோரமாக 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 29 அன்று,  காவல்துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபகுதி …

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது Read More

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,67,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் …

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா Read More

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை

வடபழநி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் …

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப்இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’  நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்’ வார இதழின்ஆசிரியர்  மீது 9 வழக்குகளும், ‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும்,  ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர்மீது 17 வழக்குகளும், ‘தினகரன்’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன, மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல்அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும்நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள்அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதிஅளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியைநிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீதுபோடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.  நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இராணுவத்தில் பணியாற்றுவது என்பதை பணியாற்றுவது என்று சொல்ல முடியாது.  மக்களைக் காப்பதும் …

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொரோனோ பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை …

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. Read More

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் …

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது Read More

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன்

ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் மேக்த்தாட்டு அணை கட்டுவோம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருக்கும் போது தெரிவித்திருந்தார். தற்போது அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும், மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் …

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன் Read More