Mirnaa
Latest Pics of Actress @mirnaaofficial #Mirnaa @teamaimpr
Mirnaa Read Moreonline news portal
Latest Pics of Actress @mirnaaofficial #Mirnaa @teamaimpr
Mirnaa Read More
நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இனைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் அனைத்து …
நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, முடிவுற்றது Read More
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவித்த “கனா” மற்றும் கமர்ஷியலாக நல்ல வெற்றியினை பெற்ற “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படங்களை தொடர்ந்து Sivakarthikeyan Productions தயாரிப்பில் மூன்றாவது திரைப்படமாகவும், “அருவி” படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் அருண் புருஷோத்தமன் …
Sivakarthikeyan Productions தயாரிப்பில், “வாழ்” திரைப்படம், ஜூலை 16 ல் வெளியீடு Read More
பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ். டிஜிட்டல் உலகில் இது புது முயற்சி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. 6 பாடல்களை அவர் …
பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடும் ஜி.வி.பிரகாஷ்: டிஜிட்டல் உலகில் புது முயற்சி Read More
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின்தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்அவர்கள் இன்று (8.7.2021) தலைமைச் செயலகத்தில்ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Post Matric மற்றும் Pre Matric கல்வி உதவித்தொகை, உயர்கல்விசிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்விஉதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திடஉரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளபயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர்துணைத் திட்டங்களின்கீழ்ச் செயல்படுத்தப்படும்திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச்சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டும் என்றும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்ப்ப. டுவதைக் கண்காணிக்க வேண்டும்எனவும், இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் வலியுறுத்தினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும. அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் ஆய்வுசெய்ததோடு, கூடுதலாக வசதிகள் தேவைப்படும்குடியிருப்புகளைக் கண்டறிந்துஅக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படைஉட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிடவேண்டும்என்றும் கேட்டுக் கொண்டார். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமிநிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிறஇனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்பஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்துமாறுமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதாரமுன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம்செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்தமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், துரித மின்இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையினைஉயர்த்திட உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடுபழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநிலஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள்குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகுஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர்முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளர் எஸ். பழனிசாமி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி, இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின்கூடுதல் காவல்துறை இயக்குநர் எச்.எம். ஜெயராம், இ.கா.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.வி.சி.ராகுல், இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளைஉரிய காலத்தில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Read More
சென்னை பெருநகர காவல், T-15 SRMC போக்குவரத்துகாவல் நிலைய தலைமைக் காவலர்கள் P.லிங்ககுமார்(த.கா.35800) மற்றும் M.பேச்சிமுத்து (த.கா.26828) ஆகியோர் கடந்த 06.07.2021 அன்று இரவு சுமார் 9.15மணியளவில் போரூர் செட்டியார் அகரம் சிக்னலில்போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த TN 12 AF 1983பதிவு எண் கொண்ட Swift Tour காரிலிருந்த ஒருவர்,போலீசாரை கண்டதும் காப்பற்றுங்கள் என கூறிகத்தியுள்ளார். சுதாரித்துக்கொண்ட போக்குவரத்துதலைமைக்காவலர்கள் லிங்க குமார், பேச்சி முத்து ஆகியஇருவரும் மேற்படி காரை வழிமறித்து மடக்கி பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் ரியாஷ் அலி, வ/39, த/பெ.சையதுஇப்ராஹிம், எண்.4, ஐசக் நகர், பட்டூர், மாங்காடுஎன்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, பரணிபுத்தூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மேற்படி காரில் வந்த 3 நபர்கள், ரியாஷ் அலியைகாரில் வலுக்காட்டாயமாக ஏற்றி கடத்தி வந்ததுதெரியவந்தது. அதன் பேரில் ரியாஷ் அலியை போலீசார்பத்திரமாக கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டனர். கடத்தல்சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து T-15 SRMC காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். T-15 SRMCகாவல் நிலைய போலீசார் கடத்தல் சம்பவம் நடைபெற்றஇடம் T-14 மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றவாளிகள் மூவரையும் T-14 மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில்பிடிப்பட்ட நபர்கள் 1.ராஜா, வ/31, த/பெ.கோபால், எண்.106, சின்னாண்டிபட்டி கிராமம், காளையாபட்டி அஞ்சல், கரூர்மாவட்டம் 2.சுரேஷ், வ/38, த/பெ.தேவராஜ், எண்.25, நாகாத்தம்மன் தெரு,எம்.ஜி.ஆர் நகர், சென்னை கார்ஓட்டுநர் 3.சரவணன், வ/42, த/பெ.மாரிமுத்து, எண்.8, வள்ளுவர் தெரு, வீரராகவபுரம், மேல்பாக்கம், சென்னைஎன்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கத்தி, 1 இரும்புராடு, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கடத்தப்பட்ட ரியாஷ் அலி,தனது நண்பரான தர்மராஜா என்பவரிடமிருந்து கடன்வாங்கிய ரூ.30,000/-ஐ திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜா தனதுநண்பர்களான ராஜா, சுரேஷ், சரவணன் ஆகியோர்உதவியுடன் ரியாஷ் அலியை கடத்தி கடன் தொகையைதிரும்ப கேட்டு மிரட்டியுள்ளது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள தர்மராஜாவைதனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பணியில் விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்திசெல்லப்பட்ட நபரை மீட்டு …
காரில் கடத்திச் சென்ற நபரை மீட்ட காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More
சினிமா மீதான தீராக்காதல், அர்ப்பணிப்பு, நல்ல கதைகளை உருவாக்க வேண்டுமென்கிற வேட்கையில், பல நல்ல தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் தயாரிப்பு நிறுவனங்களை துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில், அப்படியான அர்ப்பணிப்புடன் பல தயாரிப்பு நிறுவனங்கள் துவங்கி பெரும்பெயர் பெற்றிருக்கின்றன. அவை தமிழில் உலக அளவில் …
ONSKY Technology PVT. LTD” தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் Read More
கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார். …
மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை Read More
இயக்குநர் R.கண்ணன், “ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் திரைப்படங்களை, தொடந்து தந்து வரும் தரமான இயக்குநர். அவரது திரைப்படங்கள், சமூக கருத்துக்களோடு, அனைத்துவகை ரசிகர்களும், ரசித்து பார்க்கும்படி இருக்கும். இந்த முறை அவர், தமிழ் சினிமா வரலாற்றில் …
மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, மீண்டும் உருவாகிறது, “காசே தான் கடவுளடா” ! Read More
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. …
கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்! Read More