திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி..நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராய தெருவில்பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக் கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர், பிரிஸ்லி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.  தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட ஜோதி நகர் கால்வாயினை ஆய்வு மேற்கொண்டு அங்குகொட்டப்பட்டுள்ள  குப்பைகளை அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஏகாங்கிபுரம்பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட உத்தரவிட்டார். தொடர்ந்து குக்ஸ் சாலையை விரிவாக்கம் செய்ய மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர் .எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.