வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல்

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் போலந்து நாட்டில்இருந்து வந்திருந்த  பார்சல் ஒன்றில் ஒட்டுண்ணி வகைஉயிரினம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் அதனை சென்னை விமான நிலையசுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தகஜுலகா என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்ததுஅதனைப் பிரித்து பார்க்கையில்தெர்மாகோல் பெட்டிஒன்றில் 10 சிறிய நெகிழிக் குப்பிகள்  பருத்தி மற்றும்வெள்ளிக் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது

அதனை மேலும் சோதனையிட்டதில் ஒவ்வொருகுப்பிக்குள்ளும் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள்இருப்பது தெரியவந்ததுசிலந்திகளை சோதனையிட்டவிலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள்அவை இறக்குமதிசட்டத்திற்கு புறம்பானது என்பதாலும்வெளிநாட்டு வர்த்தகஉரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும்சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோஅங்கேயே அனுப்பி வைக்குமாறு  பரிந்துரைத்தனர்சுங்கச் சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல்செய்யப்பட்டனபின்னர் சிலந்திகள் அடங்கிய பார்சல்போலந்திற்கு திருப்பி  அனுப்பப்படுவதற்காக தபால்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுமேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மதிப்பீட்டுதுறை பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கியபொட்டலங்களையும் கண்டறிந்துள்ளது. 274 கிராம் கஞ்சாஅடங்கிய 3 பார்சல்கள்எம்டிஎம்ஏ மாத்திரைகள்மெதாம்ஃபெடமைன்அம்ஃபெடமைன்சராஸ் உள்ளிட்ட 92 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் அடங்கிய 5 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டனநெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இந்த பார்சல்கள்போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல்செய்யப்பட்டனமேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.