கொள்ளை முயற்சியை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு

கடந்த 06.05.2023 அன்று நள்ளிரவு சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை வடமாநில கொள்ளையர்கள் மூவர் உடைத்து திருட முயன்ற போது அவர்களை மடக்கிப்பிடித்து கொள்ளை முயற்சியை தடுத்த தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களையும், கொள்ளை முயற்சி பற்றி ரகசிய தகவல் அளித்த கட்டட உரிமையாளர் செல்வம் என்பவரையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு., .கா. ., டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து நற்சான்றிதழும், பண வெகுமதியும் அளித்து பாராட்டினார்.